வாரம் நாலு கவி: முகமது

by admin 3
28 views

முகமது முழுமையாய் ஒளி பெற
மெது மெதுவாய் வெளிக்காட்டி நின்று
அழகியல் வாசத்தின்  சுவாசமாய் வாசமாய்
வசமாய்  இரு விரலுக்குள் சிக்கி
மழலைகளின் மனதைப் பதற வைத்துப்
பாசமாய்ப் பலரின் நேசக் கரத்தால்
பக்குவமாய்ப் பேசிப்
பக்கம் வந்து
கொஞ்சிக் கெஞ்சும் கொஞ்சல் நீ
புன்னகைப் பூவைக் குவிக்கக் கன்னமதில்
மதிலமைக்கும்  அழகிய கலை நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!