வாரம் நாலு கவி: விலங்கிடப்படா

by admin 3
49 views

விலங்கிடப்படா தேசத்தில்
இடையூறேதுமில்லா இயக்கத்தில்
ஐயறிவுயிர்கள்
காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர
சொந்தமாயொரு வீடு
தூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்
இளைப்பாற
அதனடிகளும்
இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்
வலம்வர
கானகமே சோலையானதால்
பிறரிடம்
யாசித்துண்ண வேண்டாமல்
தன்னையே முன்னிலைப் படுத்தும்
விலங்குக் குடும்பம்
உனைக்
கூட்டமென்று சொன்னால்
பிழையாகிப் போகும்
தேடலுக்கான தத்துவத்தின்
சான்றாகிப் போய்
நின்று
வனமேகத்தின் வானவில் வண்ணங்களாய்ச் சுற்றித் திரிந்து
பசுமைப் போர்வையில் துயிலெழும்
நட்சத்திரங்கள் இவை!


ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!