வாரம் நாலு கவி: இரு

by admin 3
36 views

இரு உள்ளங்கையில் கன்னங்கள் தாங்கி
நுதல் தன்னில் இதழ் பதித்து
என் காதலின் ஆழத்தை சொல்ல முயன்றிட
உன் கன்னச் சிவப்பு கண்டு
என் கண்ணில் காமதேவன் குடியேறிட
கன்னத்தோடு கன்னம் உரசி காதல் வசனம் பேசிட
அர்த்தமற்ற உளறல் பேச்சில் கன்னி அவள் சிரித்திட
புன்னகைத்த பெண்ணவளுக்கு கன்னக்குழிகள் தோன்றிட
போதையேறிய மன்னவனோ  கன்னக்குழியில் விழுந்திட
விழுந்தவன் எழுந்தான் பிள்ளைகளின் பள்ளிக்கு
சம்பளம் கட்ட வேண்டும் என்று

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!