வாரம் நாலு கவி: முத்தலைமுறை

by admin 3
25 views

முத்தலைமுறை முந்திய
தாத்தனுக்கு தப்புறவாம்
தவறாமல் தனக்குள்
குறித்திட்ட தாயனை
மறவாமல் மடி சேர்த்தது மகனுக்கு!
மைந்தனுக்கு மகவான
மகனின் மரபணுவில்
மாறாது கடந்திட்ட
தாத்தனின் தப்பெண்ணம்
தயைமறந்த தலைமுறையில் தளிரிலிருந்து தருவாக
தனையனையும் தூண்டியது கடும் தண்டனைக்குரியோனாக!
அப்பன் பாவம்
சேர்ந்தது பிள்ளைக்கென
அறிவியல் அறிவும்
அச்சிட்டுச் சொல்லிட
ஆந்தையும் கூவிடுமோ
கோழியும் ஈன்றிடுமோ
மரபணுவின் நகலில்
மரபுப்பிழையும் மாறிடுமோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!