வாரம் நாலு கவி: எழுதிச்‌

by admin 3
31 views

எழுதிச் சென்ற விதிக்கு
விதிவிலக்காய்
எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்
கண்ணிலகப்படா கானலாய்
காட்சியின் சாட்சியாய்
வாழ்க்கை பிம்பத்தில்
இலைமறைக்காயாய் ஒளிந்த
மரபின் குரலுக்கு
விடயங்களின் தடமாய்
மறைக்காமல் மறையாய்
ஓதும் ஒலிப்பெருக்கி
சுருள் மொழியால்
இரு உருவாய்
உருண்டோடும் கருவின்
கவசகுண்டலமாய்க் காக்கும்
கர்ணகுணம் நினது!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!