வாரம் நாலு கவி: சின்னஞ்சிறு

by admin 3
36 views

சின்னஞ்சிறு உடலுக்கு
மண்ணாடை தரித்து
ஆழக் காலூன்றி
அசையாத தவக்கோலத்தில்
சிந்தை சிந்தாது
சிறுகச்சிறுக தனைவடித்து
வெடித்து முகம்காட்டி
வானெட்டிப் பார்க்கையிலே
அரையெட்டு காலன்களின்
களவாடல் கடந்து
பெருங்காற்றின் பெருமுத்தந்தாங்கி
கார்மேகங்களின் கண்ணீருடைத்து
கணுக்காலி கடிதாண்டி
கருக்கொண்டு பிரசவித்து
பிறவிப்பலனெய்திய விதை
கொத்துக்கனியாய் குதித்தாடி
களித்துக் கொண்டாடுகிறது
காத்திருந்து உழைப்புக்கோர்த்தெடுத்த
நிறைவான வெற்றியை
நிறைவாய் தொட்டபின்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!