வாரம் நாலு கவி: விதையே

by admin 3
27 views

விதையே விருட்சமாய்
வித்தாகிய பவளமுத்து
எல்லைக்கு ஒன்றாய்
ஏழெட்டு பெயர்கள்
எட்டிப் பறக்கும்
முட்டைக் கோழியையும்
முட்டித்தள்ளி முதலிடமெய்தும் புரதக் களஞ்சியம்
இரத்தத்தோள் தரித்த
சைவத் துறவி
சரிவிகித உணவின்
சாமர்த்தியப் பிறவி
சிறுதுளி பெருவெள்ளமெனும் சொல்லழகின் ஓர்அங்கம்
சிறுகைப்பிடியில் சிற்றுடலை சீராக்கும் பாரியசித்தன்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!