வாரம் நாலு கவி: உள்ளங்கை

by admin 3
32 views

உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்
இலக்கைக் கொய்யக்
கிட்டிய வேலால்
கொய்யா கொய்த
குருட்டுத் தனத்தால்
காலாயுதம் நிசப்தமாகி
நிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிட
எட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்க
பயணப் பாதை
சத்தமின்றி சிதிலமடைய
ஓரிழப்பு பேரிழப்பாய்
நூறிழப்பை நூற்கோர்த்திட
தக்க தருணத்தில்
தற்காத்துக் கொள்ளாமல்
கண்மூடித்தனமாய் இற(ழ)ந்தகாலம்
கண்மூடும்வரை சுடுகிறது
“அன்றே செய்திருக்கலாமே”
என்ற செஞ்சுடராய்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!