உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்
இலக்கைக் கொய்யக்
கிட்டிய வேலால்
கொய்யா கொய்த
குருட்டுத் தனத்தால்
காலாயுதம் நிசப்தமாகி
நிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிட
எட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்க
பயணப் பாதை
சத்தமின்றி சிதிலமடைய
ஓரிழப்பு பேரிழப்பாய்
நூறிழப்பை நூற்கோர்த்திட
தக்க தருணத்தில்
தற்காத்துக் கொள்ளாமல்
கண்மூடித்தனமாய் இற(ழ)ந்தகாலம்
கண்மூடும்வரை சுடுகிறது
“அன்றே செய்திருக்கலாமே”
என்ற செஞ்சுடராய்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உள்ளங்கை
previous post