வாரம் நாலு கவி: தனக்குத்

by admin 3
30 views

தனக்குத் தானே
செதுக்கிக்கொண்ட நீர்ச்சிலை
ஏர்த் தொழிலுக்கான
சேமிப்பு வங்கியாய்
தேவைக்கு உதவும்
தேவதை நீ
எங்கிருந்து பாய்ந்தாலும்
மகிழ்வுடன் ஏற்று
தண்ணீரைப் பருகாமல்
மண்மேல் சுமந்து
பூமிப்பந்தில் ஒருவரிக்
கவிதையானாய் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!