வாரம் நாலு கவி: எப்பொருள்

by admin 3
17 views

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் அறிந்து கூறல்
பொருத்தம் ஆகும் என்றும் மாந்தர்க்கு
வருத்தம் மேலிடும் தன்னிச்சையாய் பேசினால்
தற்குறித்தனம் என ஏசுவர் பலர்
தன்மதிப்பிழக்கக் காரணம் ஆவர் சிலர்
எதையும் ஏனெப்படி எதனால் எதற்கென
அதையும் கேள்விக் குட்படுத்தித் தெளிந்து
உண்மையை வென்று பேசுதல் நன்று
நன்மையே நல்கும் மாந்தர்க்கு என்றும்.

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!