வாரம் நாலு கவி: நாற்றிசையும்

by admin 3
52 views

நாற்றிசையும் வெற்றாகினும்
இருளாகி காட்சியொளியகன்றினும்
காற்றோ கதவோ
குரலொலிக்கு பூட்டாகினும்
முன்வரிசை மாணவனாய்
கண்ணிமைக்காது கவனிக்கிறது
இயற்கையோ இறைவனோ
சாட்சிபூதமாய் சகலத்தையும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!