வாரம் நாலு கவி: ஊடலின்

by admin 3
37 views

ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயென
கூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்
கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதே
கடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்
சுடுசொல் சொல்லினும்  பாசமிருக்குமே மிகுதியாகவே
சொல்லியே சேர்ந்திருக்கும் சுகமிகு அன்பிலும்
சொல்லாதே தூரச்செல்லும் ஊடலன்பும் அதிமிகுசுகமே
எல்லாநிலையிலும் நிலைத்திடுமே அன்பு அதீதமாகிடில்

*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!