ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயென
கூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்
கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதே
கடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்
சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே
சொல்லியே சேர்ந்திருக்கும் சுகமிகு அன்பிலும்
சொல்லாதே தூரச்செல்லும் ஊடலன்பும் அதிமிகுசுகமே
எல்லாநிலையிலும் நிலைத்திடுமே அன்பு அதீதமாகிடில்
*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: ஊடலின்
previous post