உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே
உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்ற
சத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோ
முத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும்
மொத்தத்தில் முத்தமென்றால் பலரினது நினைவினிலும்
மோகத்தின் முத்தமன்றோ முந்தியடித்து வந்திடுது
தேகத்தின் தேடலிலே காமத்தின் கதவெனவாய்
போகத்தில் புரள்வதற்காய் முத்தமது ஆனதினால்
சோகத்தில் இருந்தாலும் சுகமளிக்கும் நல்முத்தம்
மேகத்தில் மறைந்துவிட்ட நிலவதுவாய் மறைந்திடு(தே)மோ
*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜேஜெயபிரபா_
வாரம் நாலு கவி: உலகத்து
previous post