வாரம் நாலு கவி: அறிவுத்துளியால்

by admin 3
9 views

அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்
சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்
சத்தமற்று வரிசையிட்டு
விழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பி
புள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து
துளி மண் தூக்கி
ஓர் குச்சியேந்தி
பூரணமாகும் எறும்புப் புற்றாய் குருவிக் கூடாய்
அடியறிவில் படரும் கிளையொன்றும் புத்தகவுரத்தின் பெயரேந்துமே
கற்ற நூலளவேயாம் நுண்ணறிவென்ற ஔவை சொல்லினடையாளமாய்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!