கடற்கரையின் நீல வண்ண அழகில்…
கற்பாறை ஒன்று கம்பீரம் காட்ட…
அதன் மீது கண்ணாடி கோளமாய் பூமி…
நீர் நிலமும் கண்டங்களின் வண்ணமும்…
உள்ளடக்கி நிற்கும் நம் குவலயம்…
தூய்மையான கடற்கரையும்… மாசற்ற காற்றும்…
பசுமை போத்திய இயற்கையும்…
கண்ணாடி உருண்டையில் அழகாய் ஜொலிக்க…
உள்ளிருக்கும் உயிர்கள் அமைதி அச்சாரம்…
என்றும் வாழட்டும் இப்புவி இந்த படத்தை போல.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கடற்கரையின்
previous post