படம் பார்த்து கவி: பசி

by admin 3
100 views

பசி மிகுதிக்கண் தாயைத் தேடும்
சிசுக் களிறதன் பிளிறல் கேட்டே
இதோ வருகிறேன் என்பதாய்ப் பதிலோசையுடன்
தன் இரையைப் பாதியில் விடுத்தே
ஓடி வந்து குட்டியின் பசி தீர்க்கும்
தாய் யானை…. ஆம் எந்த
இனமானால் என்ன தாய்களுக்கு
முதன்மை தாம் ஈன்ற சேய்களே
கண் கண்ட தெய்வம் தாயன்றோ
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லையன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!