விண்ணெனும் வில்லிலிருந்து
ஒளியெனும் அம்பு
வானை மறைத்த
அடரிருளுக்குத் தூதனுப்ப
பகல் பூவினை
எழில்மிகு மாலையாக்கி
விடியல் சோலை
வீணை மீட்ட
புலர்ந்தது காலை
புதிய இசையாய்!
ஆதி தனபால்
விண்ணெனும் வில்லிலிருந்து
ஒளியெனும் அம்பு
வானை மறைத்த
அடரிருளுக்குத் தூதனுப்ப
பகல் பூவினை
எழில்மிகு மாலையாக்கி
விடியல் சோலை
வீணை மீட்ட
புலர்ந்தது காலை
புதிய இசையாய்!
ஆதி தனபால்