வாரம் நாலு கவி: அகமும்

by admin 3
19 views

அகமும் அழுக்கில்லா அறமுடன் வாழவே
சுகமும் பிறரடைய சுயநலமும் சிறிதுமின்றி
சூழ்நிலைக்காய் மாறாது சுத்தநெறி பேணியே
தாழ்நிலையே ஆனாலும் தருமநெறி  தனைக்காத்து
தன்னிலை போலே பிறர்நிலையும் போற்றியே
எந்நிலையும் ஆனாலும் புண்ணியங்கள் புரிந்திட்டே
எல்லா உயிரையும் நல்லா நேசித்தே
பொல்லாங்கும் பொய்யுமின்றி இல்லார்க்கும் ஈந்தளிப்போமே..

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!