வாரம் நாலு கவி: உலகத்து

by admin 3
39 views

உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே
உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்ற
சத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோ
முத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும்
மொத்தத்தில் முத்தமென்றால் பலரினது நினைவினிலும்
மோகத்தின் முத்தமன்றோ முந்தியடித்து வந்திடுது
தேகத்தின் தேடலிலே காமத்தின் கதவெனவாய்
போகத்தில் புரள்வதற்காய் முத்தமது ஆனதினால்
சோகத்தில் இருந்தாலும் சுகமளிக்கும் நல்முத்தம்
மேகத்தில் மறைந்துவிட்ட நிலவதுவாய் மறைந்திடு(தே)மோ

*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜேஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!