வாரம் நாலு கவி: தாய்

by admin 3
14 views

தாய் மடிதவளும் மழலை தொல்லை இல்லையேதந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே

தந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே

ஆசான் அளிக்கும் அறிவுரைகளும் தொல்லை இல்லையே

பாசாங்கில்லா பாசத்திலே பண்ணுமெதுவும் தொல்லை இல்லையே

இல்லை என்றே ஆகிவிடில் எல்லாம் தொல்லையாகிடுமே

இல்லாதாரின் இயலாமை எல்லாருக்கும் தொல்லை என்றேயாகிடுதே

வறுமை வசதி இதுவன்றோ தொல்லையின் எல்லையாகிடுதே

தாய்மையுணர்வும் இல்லையென்றால் தவழும் பிள்ளையும் தொல்லையாகிடுமோ

குமரியின் கவி
சந்திரனின் சினேகிதி

சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!