பாலன் இயேசு பிறந்துள்ளார் பாரூலகைக்காக்க
பாவங்களை மீட்கவும்
பாசங்களை பகிரவும்
கேட்டதெல்லாம் தருவார்
கேட்காததும் தருவார்
பார்க்கும் நபர்களோடு
பாசம்கொண்டே வாழ்வோம்
ஈர்க்கும் பாவம் விலக்கி இறைவனோடிணைந்தே
ஆர்ப்பரிக்கும் உலகில்
அன்பினையே அளித்து
ஆடிப் பாடியே
ஆனந்தமாய்
கொண்டாடுவோம்
வாடியோரும் வருந்துவோரும்
மகிழ்வுடனே வாழ
இயன்றவரை நாமும்
இல்லாத நபரோடே
இருப்பதனை பகிர்ந்தே
இன்பமாய் கொண்டாடுவோம்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: பாலன்
previous post