வாரம் நாலு கவி: புதியன

by admin 3
35 views

புதியன புகுதலும் பழையன கழிதலும்,
தமிழரின் பண்பாடாக வளர்ந்தது இந்நாடு!
ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில்,
கழிந்தது மழலையாய் தாயின் மடியினில்!
அறத்தோடு பண்பும் குணமும் வளர்ந்தால்,
கவலையின்றி கழிக்கலாம் வாழ் நாளை!
எச்சங்கள் உரமாகவும்,
கழிவுகளை வரமாகவும்,
மாற்றும் திறனாளிகளை உருவாக்கலாம் அறிவியலால்!
வேண்டாததை
எரித்து, தீமைகளை கழித்து, உருவாக்குவோம் உயர்வானவரை
இச்சமூகம் செழிக்க!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!