வாரம் நாலு கவி: பொங்கும்

by admin 3
29 views

பொங்கும் அலைகடல் சத்தத்தில்
நெஞ்சம் தாளம் போட
நினைவுக் கதிர் ஜ்வாலையில்
மெழுகுவத்தி உருகுமா?
மெல்லிய பனி கருகுமா?
நிலாச் சோறாய் சிந்தினாலும்
நிறம் இல்லா  நிறமிலியாக
வானத்  தேநீரில் மறைந்தது
நினைவு  மயக்கமா?
கனவான உணர்வுகளா?

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!