வாரம் நாலு கவி: மெல்லிடை

by admin 3
12 views

மெல்லிடை பெருத்து
வயிறும் வரிக்கோடிட
நுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாக
குழந்தைக்கழிவு நெடியும்
மகப்பேறு ரணத்தின்
ஆறாத மிச்சங்களும்
செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கி
எஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்க
பெயரும் உறவும்
உருவுமே மாறியவுனை
முப்பதாண்டு முகவரியில் முதலெழுத்தைக்கூட மாற்ற
திராணியற்றவன் இதற்கீடாய் இதென எதைத்தருவது
அறியாமலே உனை
அன்னார்ந்து பார்க்கிறேன்
பிள்ளைமுன் நிற்கும்
என் முதலெழுத்து
வேகமாய் முகத்தை
மறைத்துக் கொள்கிறது!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!