வாரம் நாலு கவி: வருடமது

by admin 3
20 views

வருடமது கடந்து
சென்ற வேளை
வருத்தங்கள் அனைத்திற்கும்
வருமான வரியாய்
சுமந்து வந்த
வலிகளைப் பரிசாக்கிவிட
வசந்தத்துடன் வாசலுக்கே
வந்த புத்தாண்டே
நின்னுடைய ஆதிநாளை
உவகையுடன் அழைக்க
கதிரின் முதலொளி
நிலத்தை முத்தமிட்டுப்
புதிய மணத்துடன்
களத்தில் கலக்க
சின்னஞ் சிறு
மலரிதழ் மௌனமொழியால்
சப்தமில்லாமல் சாதித்து
சந்நிதிக்கு வர
அலங்காரத்தில் இடம்பிடித்து
வாழ்த்தைப் பகிர்ந்தது!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!