வாரம் நாலு கவி: இரு

by admin 3
44 views

இரு மனங்கள் மட்டும்
இணைய வில்லை
இரு மணங்களும்
இணையும் நாள்
உனக்கு நான்
எனக்கு நீ என்ற
புரிதலோடு தாம்பத்யம்
உயிரோடு உறவாடும்
நாள்
இருவர் மட்டுமே
உறவுகள் அல்ல
இருவரின் பெற்றோரும்
உறவாகும் இனிய நாள்
காதலர்கள் மட்டும்
இணைய வில்லை
புனிதமான காதலும்
போற்றப்படும் நாள்.
இல்லறம் எனும்
நல்லறம் நலமாக
நடைபயிலும்
துவக்க நாள்.

மு.வைரமணி

You may also like

Leave a Comment

error: Content is protected !!