வாரம் நாலு கவி: உரைப்பதா

by admin 3
47 views

உரைப்பதா மறைப்பதா
சிந்தித்தே நித்திரையுதிர்ந்தது
நின்போலவனுமன்றோ
இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்
வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை
மறையென மனமுரைத்தது
மனசாட்சியை மறுதலித்து
மறைத்துப் புறப்பட்டேன்
முற்றத்தை எட்டும்முன்
முணுமுணுத்தது அலைபேசி
அவனேதான் அதேசெய்தியோடு
அறிந்ததும் பகர்ந்தனென்றான்
சுருக்கென்று தைத்தயென் சுயநலத்தை காரியுமிழ்ந்தது
பங்கிட்டுப் புசித்துக்கொண்டிருந்த
எதிர்முற்றத்துக் காகம்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!