வாரம் நாலு கவி: கழிவென

by admin 3
39 views

கழிவென நீக்கப்படாத
சொற்களெல்லாம் மலையென
மனமெனும் மேட்டில்
குப்பையைப் போல்
குவியச் செய்து
வடுவென மாற்றி
ஆறாத் துன்பத்தில்
ஆழ்த்தும் கூட்டம்
அங்கொன்றும் இங்கொன்றும்
தீப்பந்தத்துடன் பந்தமெனப்
பகர்ந்து கொண்டு
பந்தாடல் நடத்தும்
பகுத்தறிவாளரின் அறிவை
என்னென்று சொல்வது?
கழிவான சொற்களை
கழித்து விட்டு
கலையான வார்த்தைகள்
வார்க்கப்பட்டால் போதும்
மருந்தென வேண்டாம்
யாக்கைக்கு எப்பொழுதும்!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!