வாரம் நாலு கவி: சந்ததியெனும்

by admin 3
45 views

சந்ததியெனும் பாய்மரக்கப்பலை
வழிநடத்தும்
வளியாகி
மணமெனும்
சோலையில்
மனதிருவரின்
‘காசோலையாய்’
மனிதமெனும்
சங்கிலியைக்
கட்டியிழுக்கும்
வடமாய்
மூன்றாகிப்போன
முடிச்சால்
வதுவையதைப்
பதிவாக்கி
இல்லற
இலக்கியத்திற்கு
இலக்கணப்
பாதையை
உவகையுடன்
அழைக்கும்
உறுதிப்
பத்திரம்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!