வாரம் நாலு கவி: சோதிடமெல்லாம்

by admin 3
29 views

சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாக
நட்சத்திரங்களும்
நகையாடியதால்
ராசிகளுக்குள்ளும்
இடமேதும்
கிடைக்காமல்
மௌனராகமிசைக்க
பிரம்மனவனின்
படைப்புதனில்
அலட்சியம்
காட்ட
காட்சிக்கான
பொருளாய்
பார்வைகளுக்குள்
நுழைய
அவலட்சணமாகி
லட்சுமிகடாட்சம்
இழப்பைச்
சந்தித்து
சொந்தமான
மண்ணிலும்
முகவரியிழந்து
அகதியாய்
கதியேதுமில்லாமல்
மனதலை
சீற்றத்துடன்
அலைய
நங்கையெனப்
பெயரடையானாலும்
அலட்சியமாகத்தான்
பயணம்!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!