வாரம் நாலு கவி: பால்வண்ணன்

by admin 3
100 views

பால்வண்ணன் அண்ணன்
விழியொளியால் தீட்டுகிறான்
விழிசேர்பவற்றை ஓவியமாய்!
கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்ட
கடனாய் கேட்கிறான்
நீலத்தை நீள்வானிலே!
வானும் மறுத்துச்சிவக்க
அக்கினியாய் அழன்றவன்
ஆவேசமாய் தரையிறங்குகிறான்
தீட்டிய ஓவியங்களை
சரசரவென அழித்து!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!