வாரம் நாலு கவி: மாந்தர்

by admin 3
10 views

மாந்தர் ஒற்றுமை மேதினி காப்போம்
குஜராத் மண்ணில் பிறந்தவர் காந்தி
நிஜமாய் மக்களுக் குழைத்தவர் காந்தி
அனைவர்க்கும் ஆடை இல்லை என்று
அரையாடை அணிந்த எளியவர் காந்தி
அகிம்சை முறையில் நம்பிக்கை கொண்டவர்
அதுவே வெள்ளையரை வெளியேற்றும் என்றவர்
இந்து முஸ்லீம் கிறித்தவர் பேதம்
இந்த மண்ணில் கூடா தென்றவர்
வாய்மை தூய்மை நேர்மை எளிமை
வாழ்வின் சான்று காந்தியின் வலிமை
மாந்தர் ஒற்றுமை மேதினி காப்போம்
காந்தியின் தியாகம் வீணாகாது என்போம்

(மகாத்மா காந்தி நினைவு நாள் ஜனவரி 30)

You may also like

Leave a Comment

error: Content is protected !!