வாரம் நாலு கவி: இரக்கமற்ற

by admin 3
106 views

இரக்கமற்ற இனத்தால்
இறப்பற்று அல்லலுறுவாயென
சபிக்கப்பட்டு படைக்கப்பட்ட
பாவ ஜீவனம்
வெந்து விடைபெறவிளைந்தும்
விஷக்கதிராகும் அவலப்பிறவி
விதையேந்தும் கருப்பையடைத்து
பழியேந்தும் அப்பாவியம்பு
தடை இருந்தும்
விடையறியாது
உலாவருமிது
மற்குடலை வழியின்றி
தின்று தீர்த்தபின்னேனும்
பைக்குள் திணித்து
பதுக்கியவற்றை ஒழிக்குமோ
மண்ணாகிப்போனது என்னானால் என்னவென்றென்னும் பகுத்தறிவுள்ளம்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!