கழிவென நீக்கப்படாத
சொற்களெல்லாம் மலையென
மனமெனும் மேட்டில்
குப்பையைப் போல்
குவியச் செய்து
வடுவென மாற்றி
ஆறாத் துன்பத்தில்
ஆழ்த்தும் கூட்டம்
அங்கொன்றும் இங்கொன்றும்
தீப்பந்தத்துடன் பந்தமெனப்
பகர்ந்து கொண்டு
பந்தாடல் நடத்தும்
பகுத்தறிவாளரின் அறிவை
என்னென்று சொல்வது?
கழிவான சொற்களை
கழித்து விட்டு
கலையான வார்த்தைகள்
வார்க்கப்பட்டால் போதும்
மருந்தென வேண்டாம்
யாக்கைக்கு எப்பொழுதும்!!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: கழிவென
previous post